கொல்கத்தா, ஜன.16- வரும் மக்களவைத் தேர்தலில் மாநில கட்சி கள் தீர்மானகரமான சக்தி யாக இருக்கும் என்று நோபல் பரிசு பெற்றவரும், பொருளா தார நிபுணருமான அமர்த் தியா சென் கூறினார். பாஜக எளிதில் வெற்றி பெறும் என்ற கருத்து தவறா னது. பாஜகவுக்கும் பல வீனங்கள் உள்ளன. இதனை மற்ற கட்சிகளும் அங்கீக ரித்து செயல்பட வேண்டும் என பிடிஐ செய்தி நிறுவனத் திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். திமுகவால் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்த முடி யும். சமாஜ்வாடி கட்சியும் தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. திரிணா முல் நிலைப்பாடும் முக்கிய மானது. காங்கிரஸுடன் புதிய கூட்டணிக்கு என்சிபி, ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் அழைப்பு விடுத்து வருகின்றன. பா.ஜ.க.வை தோற்கடிக்க இரு அணி களுக்கு இடையே பலத்த போட்டியை ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை. பாரதிய ஜனதா படிப்படி யாக இந்தியாவின் பார்வை யை தரம் தாழ்த்தி வருகிறது. பாரதிய ஜனதா கட்சி இந்தி யாவை இந்து இந்தியா, இந்தி பேசும் இந்தியா என்று சுருக்கிவிட்டது என்று அமர்த் தியா சென் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில், தேர்த லில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிபெறும் திறன் குறித்து சென் சந்தேகம் தெரிவித் தார். “அகில இந்தியப் பார்வை இருந்தாலும், காங் கிரஸ் பலவீனமாகிவிட்டது. காங்கிரசை எவ்வளவு நம்பி இருக்க முடியும் என்று தெரியவில்லை. உள்ளுக் குள் பிளவு உள்ளது’ என் றார்.